today

Tuesday, 15 November 2011

புத்தாவின் வெட்டவெளி நடைப்பயணம்.

புத்தாவின் வெட்டவெளி நடைப்பயணம்.

புத்தர் எங்கு சென்றாலும் தான் வெட்டவெளியில் பயணித்துக்கொண்டதாக சொல்வார்.  அதாவது அவரது ஆன்மா அவரின் உடலை பின்பற்றி பின்னாலேயே செல்லும்.  அவரது உடல் முன் செல்லும்.  இந்த சவம் என்னும் பூத உடல் முன் சென்று ஆன்மா பின் செல்லும் பாவனை தான் அவரது ரகசியம்.  நான் என்று சொல்லுவதற்கு பதிலாக தாதக்கட என்றே சொல்வாராம்.  யார் அந்த தாதக்கட  புத்தனின் பூத உடலே அந்த தாதக்கட நான் என்று சொல்லும் போது ஆணவமலம் சேரும் என்றே தன்னை தான் தாதக்கட என்று ஒவ்வொரு உபன்யாசத்தின் போதும் விளக்குவார்.  தாதக்கட அங்கு சென்றது அப்போது தாதக்கடவிற்கு இது தெரிந்தது. வெட்டவெளியே தானும் பிற உயிர்களும் என்பது உணர்ந்தபின் எல்லா உயிரிடத்தும் இவ்வெட்டவெளி உள்ளதால்.  எல்லா உயிரிடத்தும் உண்மையாய், உயிராய், ஆன்மாவாய் இருப்பதை அன்போடு பார்க்க ஆரம்பித்து  தானும் அன்புமயமாக மாறி பற்றற்று தொடர்ந்து வெட்டவெளியிலே பயணம் செய்தார் புத்தர்.  அவரோடு நாமும் பயணிப்போம்.

No comments:

Post a Comment